Total Pageviews

Friday 6 November 2015

வாய் வலித்துப்  போனதாலே
கடை வாயில் வழியவிட்டு 
அயற்சியிலே உறங்குகின்ற 
குழந்தைக்கு  

முலைப்பால் கொடுக்கின்ற 
முனைப்பினிலே 
ரவிவர்மா ஓவியம் போல் 
கண் அயர்ந்து துயில்கின்ற 
என் இனிய இல்லாளே !

உன் விலகிய மேலாடையை 
நான் 
சரி செய்யும் அந்நேரம்
  
இழுத்து  இழுத்து 
 மறைக்கின்ற
உன் பால்ய செய்கைகள்
பசுமையாய் என் நினைவில் ..........

                                       ச.பால சுப்பிரமணிய பாரதி .
  
 

1 comment:


  1. வணக்கம்!

    தாய்மை மணக்கும் தமிழ்கண்டேன்! சீரேந்தி
    வாய்மை மணக்கும் மனத்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete