Total Pageviews

Sunday 29 November 2015

சினமுடன்  நோக்குகிறாள்
''WEEK   END"
 மழையை  என்மகள் .

Sunday 8 November 2015

                                JCB
                               --------
தொழிலாளியின் பிழைப்பில் 
மண்ணைப் போட
முதலாளித்துவம் எடுத்திட்ட
புதிய வடிவம் .
                       ச.பாலசுப்பிரமணிய பாரதி  
                                      புதுமைச்  சாகுபடி
ஆழமாய் மண்கிளறி
கலவை விதை விதைக்க
கழனியேங்கும்
காங்க்ரீட் விருட்ஷம்
                                   
                                  ச. பாலசுப்பிரமணிய பாரதி
       
  

Saturday 7 November 2015

ஆபத்து ஏதும்  வருமோஎன
ஐந்தாம்படையாய்
வேவுபார்க்குது
தாழ்வாரக் கூட்டில்
முட்டைஇட்டுள்ள
சிட்டுக்குருவி
                        ச.பாலசுப்பிரமணிய  பாரதி
   
தவமாய்  தவமிருந்தும்
வராத  மழை
நடைபாதை  வியாபாரியின்
பிழைப்பில்  அடிக்க
தீபாவளி  வாரத்தில்
தறிகெட்டுப்  பெய்கிறது

                                ச.பாலசுப்பிரமணிய  பாரதி





     

Friday 6 November 2015

வாய் வலித்துப்  போனதாலே
கடை வாயில் வழியவிட்டு 
அயற்சியிலே உறங்குகின்ற 
குழந்தைக்கு  

முலைப்பால் கொடுக்கின்ற 
முனைப்பினிலே 
ரவிவர்மா ஓவியம் போல் 
கண் அயர்ந்து துயில்கின்ற 
என் இனிய இல்லாளே !

உன் விலகிய மேலாடையை 
நான் 
சரி செய்யும் அந்நேரம்
  
இழுத்து  இழுத்து 
 மறைக்கின்ற
உன் பால்ய செய்கைகள்
பசுமையாய் என் நினைவில் ..........

                                       ச.பால சுப்பிரமணிய பாரதி .
  
 

Thursday 5 November 2015

ஏ பெண்ணே
இடுப்புக்கு மேலே
வெற்றுடம்பாய்
இருவருமே
சுற்றித் திரிந்திட்டோம்
இன்றென்ன வந்தது
புதிதாய் ஓர் துண்டை
மேல் போர்த்தி வந்து நீ
இழுத்து இழுத்து
மறைக்கின்றாய்
புதிதாய் எனக்கொன்றும்
புலப்படவில்லை
ஆனாலும்
மீண்டும்மீண்டும்
உன்னை நோக்க
ஏதோ ஒன்று
ஈர்க்கிறது
                  ச.பால சுப்பிரமணிய  பாரதி