Total Pageviews

Sunday 4 August 2013




செவ்வாழைத்தோட்டத்திலே
செவ்விதழைத் தான்விரித்து
சிரித்துநின்ற பெண்ணே
ஏன்தயக்கம் உன்முகத்தில்
உன்காதல் தான் விரும்பும்
தென்றலுணைத்  தழுவ

மறந்தானோ.

-- ச. பாலசுப்ரமணியபாரதி 


நடவு வயல்கள் எங்கும் வெள்ளை தேவதைகள்
அட
கொக்குகள்
– ச.பாலசுப்ரமணிய பாரதி.


வெள்ளாற்று மணலுக்கு
  வெளிஉலகில் வெகுகிராக்கி
நேற்றுவரை
விபசாரத்தை மட்டுமே
  இரவுத்தொழிலாக எண்ணி    இருந்தேன்
இன்றோ
  இரவுக்குள் இருபதுநடை
அடித்திட விரைந்திடும்
இவர்களைக் கண்டபின்
      பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்
இரவிற்கு ஒருவனுக்குத்தான்
முந்தி விரிப்பார்கள்
                        ச...பாலசுப்ரமணிய பாரதி