Total Pageviews

Thursday 5 November 2015

ஏ பெண்ணே
இடுப்புக்கு மேலே
வெற்றுடம்பாய்
இருவருமே
சுற்றித் திரிந்திட்டோம்
இன்றென்ன வந்தது
புதிதாய் ஓர் துண்டை
மேல் போர்த்தி வந்து நீ
இழுத்து இழுத்து
மறைக்கின்றாய்
புதிதாய் எனக்கொன்றும்
புலப்படவில்லை
ஆனாலும்
மீண்டும்மீண்டும்
உன்னை நோக்க
ஏதோ ஒன்று
ஈர்க்கிறது
                  ச.பால சுப்பிரமணிய  பாரதி         

3 comments:


  1. வணக்கம்!

    பெண்ணின் அழகினைப் பேசும் கவியிது!
    கண்ணில் கமழும் கனிந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete